Wednesday, 10 January 2018

இன்று முதல் 3 நாட்களுக்கு தினமும் ரூ.1 சம்பளத்தில் அரசு பஸ்களை இயக்க முடிவு

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக போதிய பஸ் இல்லாமல் பொதுமக்கள் சிரமத்தை சந்தித்துள்ளனர். பனியன் தொழில் நிறுவனங்கள் நிறைந்த திருப்பூரில் வெளிமாவட்ட தொழிலாளர்கள் தங்கி அதிகம் பேர் பணியாற்றி வருகிறார்கள். பொங்கல் பண்டிகையை கொண்டாட தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்லும் வகையில் எங்களால் முடிந்த உதவியை செய்யும் நோக்கத்துடன், எங்கள் சங்கத்தின் டிரைவர்களை கொண்டு அரசு பஸ்களை இயக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்.அதன்படி எங்கள் சங்கத்தின் கீழ் உள்ள டிரைவர்கள் முதல்கட்டமாக 25 பேர் நாளை(இன்று) முதல் 13–ந் தேதி வரை அரசு பஸ்களை இயக்க உள்ளனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் எங்கள் டிரைவர்களுக்கு தினமும் ரூ.1 சம்பளம் வழங்கினால் போதும். எங்கள் சங்கத்தின் டிரைவர்கள் முறையாக லைசென்சு உள்ளிட்டவை வைத்துள்ளனர். அரசு போக்குவரத்து திருப்பூர் பணிமனை அதிகாரிகளிடம் பேசியுள்ளோம். நாளை(இன்று) முதல் அரசு பஸ்களை எங்களுடைய டிரைவர்கள் இயக்க உள்ளனர். சேவை மனப்பான்மையுடன் நாங்கள் இதை செய்கிறோம்.இதுபோல் திருப்பூரில் உள்ள அனைத்து சங்கங்களும் முன் வந்து முடிந்த அளவுக்கு தகுதியுள்ள டிரைவர்களை கொடுத்து, அரசு பஸ்களை இயக்கி தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வதற்கு உதவியாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது சங்கத்தின் செயலாளர் நடராஜன் உடனிருந்தார்.
kingkingunitv.blogspot.com

No comments:

Post a Comment

தாராபுரம் சர்ச் ரோட்டில் போக்குவரத்து காவலர் நியமனம்

தாராபுரம், ஜன.11 – தீக்கதிர் செய்தி எதிரொலியான தாராபுரம் சர்ச் ரோட்டில் போக்குவரத்து காவலர் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தாராபுரம்...