திருப்பூர்:நிலத்தின் 'சிட்டா' மற்றும் புல வரைபடத்துக்காக, அலைந்து திரிய வேண்டிய தில்லை; கட்டணமின்றி, எளிதாக பெறலாம் என்று,வருவாய்த்துறை தெரிவித்துள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், மூன்று வருவாய் கோட்டங்கள்; ஒன்பது தாலுகா, 35 வருவாய் உள்வட்டங்கள், 350 வருவாய் கிராமங்கள் உள்ளன; 25 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். வருவாய்த்துறையின் ஒரு பிரிவாக இயங்கும் நில அளவைத்துறை, விவசாயிகள் மற்றும் பொதுமக்களுடன் நேரடி தொடர்பில் இருக்கிறது.நிலம் தொடர்பான அனைத்து பரிவர்த்தனைகளும், நில அளவை பிரிவு மூலமாக நடக்கிறது.பட்டா நிலவிவரங்கள் தொகுக்கப்பட்டு, கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டு, 15 ஆண்டுகளாகவே சிட்டா, அடங்கல் விவரம், கம்ப்யூட்டர் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், பதிவேடுகளாக மட்டுமே உள்ள நில ஆவணங்களை தொகுத்து, கம்ப்யூட்டரில் பதிவு செய்து பயன்படுத்த அரசு திட்டமிட்டது.அதன்படி, நிலம் தொடர்பான விவரம், கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டது. தற்போது திருப்பூர் தெற்கு, பல்லடம், அவிநாசி தாலுகாவில் உள்ள அனைத்து விவரங்களும், கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பட்டா -சிட்டா மற்றும் புலவரைபடம் ஆகிய சேவையை, நில உடமையாளர்கள் இணையதளம் வாயிலாக எளிய முறையில் பெறமுடியும்.இதில், 'www.eservices.tn.gov.in' என்ற இணையதளம் வாயிலாக, மாவட்டம், தாலுகா, வருவாய் கிராம விவரங்களையும்; நிலத்தின் பட்டா எண் அல்லது க.ச., எண்ணை பதிவு செய்தால், சிட்டா, உரிமையாளர் விவரத்தையும், நிலத்தின் வரைபடத்தையும்பார்வையிடலாம்.வருவாய்த்துறை, சர்வே பிரிவு அலுவலகங்களுக்கு செல்லாமலேயே, எளிய முறையில் சிட்டா, அடங்கல் மற்றும் புலவரைபட விவரங்களை, 'பார் கோடு' தொழில்நுட்பத்துடன் பதிவிறக்கம் செய்ய கொள்ளலாம்.இதுகுறித்து நில அளவைப்பிரிவு அதிகாரிகள் கூறுகையில், 'இணையதளம் வாயிலாக புலவரைபடம் பெறும் திட்டத்தை, கடந்த வாரம் தமிழக முதல்வர் துவக்கி வைத்தார். இதுவரை, கட்டணம் செலுத்தி, கம்ப்யூட்டர் சிட்டா பெறப்பட்டது.இனி, செலவே இல்லாமல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கம்ப்யூட்டர் தேவையில்லை; நவீன மொபைல் போன்களிலேயே, ஒரு நொடியில் விவரங்களை பெறலாம். திருப்பூர் தெற்கு, அவிநாசி, பல்லடம் தாலுகாக்களில், முதல் கட்டமாக இணையதளம் வாயிலாக, நில விவரங்களை பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.மற்ற தாலுகாக்களில், நில விவரங்கள் பதிவேற்றம் பணி முடிந்ததும்,இத்திட்டம் அமலாகும்,' என்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
தாராபுரம் சர்ச் ரோட்டில் போக்குவரத்து காவலர் நியமனம்
தாராபுரம், ஜன.11 – தீக்கதிர் செய்தி எதிரொலியான தாராபுரம் சர்ச் ரோட்டில் போக்குவரத்து காவலர் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தாராபுரம்...
-
https://kingkingunitv.blogspot.in/?m=1 பொங்கலூர்: திருப்பூர் அவினாசி பாளையம் அருகே உள்ள நாச்சிபாளையம் நத்தகாட்டுதோட்டத்தை சேர்ந்தவர் மு...
-
https://youtu.be/jk4mCPEHYEc
-
Most dangerous video KingKinguniTv.blogspot.com

No comments:
Post a Comment