Sunday, 14 January 2018

பொள்ளாச்சி தென்னந்தோப்புகள் மட்டும்தான் கண்ணுக்கு தெரியும்!’ - வெப்பக் காற்று பலூனில் ஓர் 'த்ரில்' 'ஜில்' பயணம்

ஊஷ்ஷ்ஷ்…. ஊஷ்ஷ்ஷ்… என்று தீப்பிழம்புகள் பீறிட்டு புறப்படத் தயாராக, காற்றைக் கிழித்துக் கொண்டு விண்ணில் பறக்கின்றன வெப்பக் காற்று பலூன்கள். வெளிநாடுகளில் இந்தக் காட்சிகள் மிகவும் சாதாரணமான ஒன்று. ஆனால், தமிழகத்துக்கு இவை புதிது. சுற்றுலாத்துறை மற்றும் தனியார் அமைப்புகள் இணைந்து, பொள்ளாச்சியில் 4-வது ஆண்டாக நடத்தும் சர்வதேச பலூன் திருவிழாவில்தான் இந்தக் காட்சிகள். தினசரி காலை, மாலை என்று இரண்டு வேளைகளும், பிரமாண்ட பலூன்கள் வானில் வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன.இந்த முறை உலகம் முழுவதும் இருந்து, 12 பலூன்கள் களமிறக்கப்பட்டுள்ளன. அவற்றில் நியூ என்ட்ரியாக எந்திரன் 2.0 பலூன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றை டேக் ஆஃப் செய்வதற்காக, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 24 பைலட்கள் பொள்ளாச்சிக்கு லேண்ட் ஆகியுள்ளனர். வருகின்ற 16-ம் தேதி வரை சக்தி மில்ஸ் மைதானத்தில் இந்தத் திருவிழா நடக்கிறது.

ரெய்டு அனுபவத்துக்காக, திருவிழா நடக்கும் மைதானத்துக்குச் சென்றோம். ஒரு பலூனில் பைலட்டுடன் சேர்த்து, 4 பேருக்கு மட்டுமே அனுமதி. அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பே, பலூனை பறக்க விடுவதற்கான ஏற்பாடுகளில், பைலட்டுகளும், வாலன்டியர்ஸ்களாக உள்ள மாணவர்களும் இறங்கி விடுகின்றனர்.

No comments:

Post a Comment

தாராபுரம் சர்ச் ரோட்டில் போக்குவரத்து காவலர் நியமனம்

தாராபுரம், ஜன.11 – தீக்கதிர் செய்தி எதிரொலியான தாராபுரம் சர்ச் ரோட்டில் போக்குவரத்து காவலர் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தாராபுரம்...