Saturday, 6 January 2018

அறுவடை செய்ய கூலி பல மடங்கு அதிகரிப்பு:சோளம் விதைத்த விவசாயிகள் கவலை

சோளத்தட்டு அறுவடைக்கு, தொழிலாளர்கள் கூலி பலமடங்கு அதிகரித்துள்ளதால், சோளப்பயிரை கால்நடை மேய்ச்சலுக்கு பயன்படுத்த வேண்டிய நிலைக்கு, விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.மக்காச்சோளம், 23 ஆயிரத்து, 482 எக்டரிலும், கம்பு, 57 எக்டரிடலும் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. தேசிய வேலை உறுதி திட்டத்தால், விவசாய பணிகளுக்கு தொழிலாளர் கிடைப்பது அரிதாகிவிட்டது. சோளப்பயிர் நன்கு வளர்ந்திருந்தாலும், தாமதமாக விதைத்த சோளப்பயிர்களுக்கு வடகிழக்கு பருவ மழை கை கொடுக்கவில்லை. இதனால், குறைவான உயரம் மட்டுமே வளர்ந்துள்ளன. தை மாதத்துக்கு பின்,துவங்கும் சோளப்பயிர் அறுவடை, இந்தாண்டு மார்கழி துவக்கத்திலேயே ஆரம்பமாகிவிட்டது. அறுவடை துவங்கியுள்ள நிலையில், தொழிலாளர்களின் தினக்கூலி பல மடங்கு உயர்ந்ததால், விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆண்கள், 600 ரூபாயும், பெண்கள், 450 ரூபாயும் தினக்கூலி கேட்கின்றனர். வேறுவழியின்றி, கூடுதல் செலவு செய்து, சோளப்பயிர் அறுவடை நடக்கிறது. இதனால், சோளத்தட்டு விலையும், பல மடங்கு உயர்ந்துவிட்டது.இந்நிலையில், குறைவான உயரத்தில் வளர்ந்த சோளத்தட்டுக்கு கிராக்கி இருக்காது என்பதாலும், அதிக கூலி கொடுக்க முடியாமலும், கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலமாக மாற்றியுள்ளனர். தேசிய வேலை உறுதி திட்ட பணியாளர்களை,https://kingkingunitv.blogspot.comவிவசாயப்பணிக்கு பயன்படுத்தும் வகையில், அரசு சட்ட திருத்தம் செய்தால் மட்டுமே, பெரும் நஷ்டத்தில் இருந்து தப்பிக்க முடியுமென, சிறு, குறு விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.- நமது நிருபர் --

No comments:

Post a Comment

தாராபுரம் சர்ச் ரோட்டில் போக்குவரத்து காவலர் நியமனம்

தாராபுரம், ஜன.11 – தீக்கதிர் செய்தி எதிரொலியான தாராபுரம் சர்ச் ரோட்டில் போக்குவரத்து காவலர் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தாராபுரம்...